Wednesday, June 30, 2010

தினமணியின் தெரிந்தா தெரியாமலா கட்டுரை சொல்வது என்ன?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=263921&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3cfont+color%3d%22red%22%3e%u0ba4%u0bb2%u0bc8%u0baf%u0b99%u0bcd%u0b95%u0bae%u0bcd%3a%3c%2ffont%3e+%u0ba4%u0bc6%u0bb0%u0bbf%u0ba8%u0bcd%u0ba4%u0bbe...+%u0ba4%u0bc6%u0bb0%u0bbf%u0baf%u0bbe%u0bae%u0bb2%u0bbe...%3f

நடு தர மக்களின் மீது சுமையும் முதளாலிகளின் வீட்டில் பணத்தையும் ஏற்றுவது சரியா என்று அழகாக கேட்டுள்ளார்.

உண்மை தான், இந்த பணக்கார மக்களின் வியாபார தந்திரங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று பார்ப்போம்

தமிழக அரசு தனது வரவு செலவு திட்டத்தில் அரசு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்த நாளில் இருந்து தக்காளியில் இருந்து கருவேப்பில்லை வரையிலான விலைகள் கிடு கிடுவென உயரும்.

அன்றைய தினத்தில் இருந்து மக்கள் அதிக பணம் கொடுத்து தான் காய்கறிகளை வாங்க வேண்டும். சம்பளத்தில் என்ன வித்தியாசம் வருகிறதோ அவ்வளையும் இந்த பொருட்களின் விலை ஏற்றத்தை சரி செய்யவே சரியாக போகும்.

பொருட்களை விளைவித்தவன் அதே விலைக்கு தான் விற்பான் அல்லது அவனது பொருட்கள் சந்தைக்கு போகாமல் மாட்டுக்கு தீனியாக போவதை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

அப்படி இருக்க இந்த விலை ஏற்றங்களில் விளையாடுபவர்கள் யார் என்று பார்த்தால், இந்த தரகு வியாபாரிகள் தான் இந்த விளையாட்டை அழகாக விளையாடுவார்கள்.

இந்த விலையேற்றம் இவர்களோடு நிற்கிறதா இல்லை, உணவகம் முதல் தொடங்கி கடைசியில் பயண சீட்டு வரையில் வந்து நிற்கும்.

பணம் படைத்தவர்களுக்கு 5 உரூபாய்களுக்கு வாங்குவதும் ஒன்று தான் 50 உரூபாய்களுக்கு வாங்குவதும் ஒன்று தான். ஆனால் நடுத்தர வர்கத்திற்கோ இது 10 மடங்கு. ஏழை மக்களுக்கோ இது எட்டாத கனியாக என்றும் இருப்பதான் அவர்கள் இதை பற்றி எல்லாம் கவலை கொள்வது இல்லை.

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்துவதற்கு காரணம் விலை வாசி ஏற்றம் என்று முதல்வர் சட்ட சபையில் கூறுவார். ஆனால் அவர் சொல்லாமல் சொல்வது முதளாலிகன் இலாபம் உயர்த்தவே தான் இந்த ஏற்றம் என்று.

50 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிக பெரிய பொருளாதார முன்னேற்றம் வந்தது. எங்கே நடுதர மக்கள் எல்லாம் முன்னேறி விடுவார்களோ என்று பழையபடி வீட்டு, வண்டிகள், பெட்ரோல் என்று எல்லா விதமான பொருட்கள் முதல் அனைத்து வாங்குபவைகளையும் சகட்டு மேனிக்கு விலையை ஏற்றி இலட்ச உரூபாய் சம்பளம் வாங்கினால் கூட சென்னையில் வீடு வாங்க முடியாத அளவிற்கு எல்லா பொருட்களும் விலையேறியதே யாரல் என்று நமக்கு தெரியுமா. அல்லது ஏன் ஏறியது என்று காரணம் தான் தெரியுமா........

இந்த வீட்டு மனைகளின் விலை ஏற்றம் யாருக்கு பலனை கொடுத்தது, வீட்டு வாடகையின் விலையேற்றமும் யாருக்கு பயனை கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சென்னை அருகில் உள்ள வீட்டு மனைகளை விலைக்கு விற்கும் போது வடக்கே உள்ள பணம் படைத்த முதலைகள் கொத்து கொத்தாக மனைகளை வாங்கி குவித்துவிட்டார்கள். பிறகு கேட்ப்பவர்களுக்கு ஒன்று இரண்டு என்று ஒன்றுக்கு பத்துவிலைகளில் விற்று வருகிறார்கள்.

மொத்தமாக வாங்கிய அந்த வடக்த்தியற்களுக்கு இருந்த ஒரே பலம் அவர்களிடம் அபரிவிதமாக பணம் இருந்தமை தான் அன்றி வேறு எதுவும் இல்லை.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து வீட்டு மனைகளின் பத்திரங்களில் இந்த முதலாளிகளின் பெயர்கள் இல்லாமல் இருப்பது அரிதாகாவே இருக்கும்.

இப்படி ஒன்றுக்கு பத்தாக விலையேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.

இந்தியாவை பொருத்த அளவில் இன்னமும் சாதியும் பாகுபாடுகளும் இருப்பதற்கு காரணம் இந்த பொருளாதார ஏற்ற தாழ்வுகள் தான் முக்கிய காரணம்.

இப்படி இருக்கும் ஏற்ற தாழ்வுகளால் அடி தட்டில் இருக்கும் மனிதற்களுக்கு அன்றாடம் வயிரை கழுவுவதே அரிதாக இருக்கும் பொருளாதாரத்தில் அவர்கள் எல்லாம் எங்கே குழந்தைகளை படிக்கவோ அல்லது நல்ல ஒரு தொழிற்கல்விக்கோ அனுப்ப முடியும். மாறாக கிடைகின்ற தினகூலியில் இன்னமும் ஒரு 50 உரூபாய்க்கள் கிடைக்கும் என்றால் அந்த வேலைக்கு பிள்ளைகளை அனுப்பும் நிலையில் தான் அடி தட்டு மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் நடு தட்டு மக்களோ போன தலைமுறையினரது புண்ணியத்தால் தலை எடுத்த அளவில் தங்களது தலை முறையை அடுத்த நிலையின் நுனிக்காவது அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கும் ஒரு இனமாக இருக்கிறார்கள்.

இன்னமும் வெளிப்படையாக சொன்னால் பணக்காரர்களின் அளவுகோள்களில் ஒன்றான சொந்த வீடு என்ற அடிப்படையை காரணங்களில் துவக்கம் கொடுத்தால் அடுத்த அடுத்த தலைமுறையில் இவர்கள் எல்லாம் நல்ல முறையில் வந்துவிடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் தங்களது நலங்களையும் தொலைத்து தனது மக்களை முன்னேற்றுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

எங்கே தங்கள் உயர் குடி தட்டினை எட்டி பிடித்து நாங்களும் உயர்குடியாக ஆகிவிட்டோம் என்று மார் தட்டுவார்களோ என்ற வயிற்றெரிச்சலில் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளி இடுவதே தொழிலாக இந்த பணம் படைத்தவர்கள் அலைவதும், தொழில் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது இந்தியாவில்.

அமெரிக்கா போன்ற முன்னேற்றம் கண்ட நாடுகளில் 5 மாத சம்பள விகிதத்தில் மகிழ் உந்து என்று இருந்த கணக்கு போக இந்தியாவில் வாழ்க்கை இலட்சியமே ஒரு வண்டி வாங்குவது தான் என்று இருந்த நிலை போய். இந்தியாவிலும் 5 மாத சம்பளத்தில் ஒரு வண்டியை வாங்கிவிடலாம் என்ற நிலை வர. அப்படியே விட்டால் வீடு பங்களா என்று வருவீர்கள் போலும் என்று இப்படி செயற்கையாக விலையை எல்லாம் ஏற்றி மறுபடியும் நடு தட்டு மக்களை குடிசை வாசிகளாகவே( நகர்புர) வைக்கவேண்டும் என்று அவர்களுக்கு வேண்டுதல் போலும்.....................

நல்ல இருங்கையா நல்ல இருங்க உங்க புள்ளை குட்டிகள் மட்டும் நல்லா இருக்கட்டும். அடுத்தவர்கள் எப்படி போனால் உங்களுக்கு என்ன......................

Friday, June 18, 2010

தினமலர் அது என்ன பிளாட்பாரவாசிகள் விளக்குவீர்களா



வெளி நாட்டுமக்கள் இந்தியாவிற்கு வந்து எத்தனையோ நல்ல நல்ல வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சேவை நிறுவணங்கள் தொட்டு ஆராய்ச்சி நிறுவணங்கள் வரை பணியாற்றுகிறார்கள்.

மதவாத பொய்களை எல்லாம் உண்மைகள் என்று நம்பியவர்களும் கூட கூட்டம் கூட்டமாக வந்து இங்கேயே தங்கி இந்தியர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் இந்த காலத்தில்.

தினமலர் இப்படி ஒரு செய்த்தி வெளியிடுகிறது, ஏன் இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டு ஆண்கள் எல்லாம் மிகவும் ஒழுக்கமாகவும் பொறுப்பாகவும் இருக்கிறார்கள் போலும், பெண்கள் மட்டும் தான் இப்படி ஆகிவிட்டார்கள் போலும்.

வெளி நாடுகளுக்கு வந்து வாழ்ந்து பாருங்கள் தினமலர் மக்களே அப்போது தெரியும் எவ்வளவு அழகான வாழ்க்கையை இங்கே மக்கள் பொறுப்புடன் வாழ்கிறார்கள் என்று தெரியும்.

வெளி நாடுகளில் கழிப்பறைகளில் கூட இப்படி ஒரு வீச்சம் அடிக்காது அப்படி ஒரு வீச்சம் ஊர் முழுவதும் அடிக்கிறது அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் இந்த பெண்கள் புகை பிடிப்பதையும் அதுவும் தெருவோரம் உட்கார்ந்து இருப்பதை பிளாட்பாரவாசி என்று விமர்சிக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது.

பிளாட்பாரத்தில் மக்களை வசிக்கும் படி வைத்திருக்கும் நிலைக்கு இந்தியாவே தலைகுணிய வேண்டும். அதைவிடுத்து, வெளி நாடுகளிலும் இப்படி தான் இருப்பார்கள் என்று எழுதும் இந்த செய்த்திதாள் தான் உலக தரமாம்.

சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை............

தனது முதுகை முதலில் பார்க்கவும், அடுத்தவர்களை பிறகு பார்க்கலாம்.