Friday, February 26, 2010

கவிஞர் சல்மாவின் நிகழ்ச்சி 02-28-2010 வாசிங்டன் தமிழ்ச் சங்கம்


Sunday, February 21, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - திரைவிமர்சனம்(Wedding Crashers )


விசாலுக்கு அடுத்தபடியாக என்ன செய்வது என்று தெரியவில்லை போலும் இப்படி ஒரு கதையில் நடிக்க அவர் எப்படி தான் ஒத்துக்கொண்டர் என்று தெரியவில்லை. படத்தில் விசாலுடைய வேடம், உடலமைப்பும் அப்படியே சிவா மனசுல சக்தியில் வரும் சீவாவை பார்ப்பது போலே இருக்கிறது.

அது மட்டும் இல்லாது, இந்த படத்தில் பெண்களை கண்டபடி ஏசியும் பேசியும் பேசுவதில் அளவுக்கு மிஞ்சி வசவுகளை வீசியுள்ளார். இது விசாலின் மேல் இனி மேல் இரசிகைகளுக்கு அலுப்பு தட்டும்.

தீராத விளையாட்டு பிள்ளையாக காட்டும் காட்சிகள் அனைத்திலும் சிம்புவை நடிப்பில் கொண்டு வந்து காட்டுகிறார். என்ன விரல் வித்தை மட்டும் தான் இல்லை.

எதற்காக இப்படி பெண் தேடுகிறார் என்று கேட்டால், சின்ன வயதில் இருந்து என்று துணை கதை வேறு சகிக்கவில்லை.

பெண் பார்ப்பதையும், சட்டை, காய்கறி வாங்குவதும் ஒன்று என்று பேசும் அளவிற்கு இவர்களது நாகரீகம் வளர்ந்துள்ளது நல்ல பரிணாம வளர்ச்சி.

சரி கதையிலும் வசனங்களிலும் ஏன் இப்படி ஏக குழப்பம். கதை பாத்திரங்கள் முன்னுக்கு பின் முறனாக நடப்பது பேசுவதுமாக இருக்கிறார்களே என்று படம் பார்ப்பவர்கள் குழம்பித்தான் போவர்கள்.

அப்படி என்ன தான் கதையாக எழுதி இப்படி குழப்பிக்கொண்டார்கள் என்றெல்லாம் யாரும் குழம்ப வேண்டாம். இந்த படம் ஆங்கிலப்படம் (Wedding Crashers ) தமிழாக்கம்.



ஆங்கிலத்தில் கதை இது தான், இரண்டு நண்பர்கள். நீண்ட நாள் நட்பு, தனது திருமணத்தோழனாக நீ தான் எனக்கு என்று அழைக்கும் அளவிற்கு. அந்த நண்பர்களின் பொழுது போக்கு, அக்கம் பக்கம் நடக்கும் பெரிய திருமணங்களுக்கு செல்வதும். அந்த திருமணங்களில் மாட்டும் அழகான பெண்களை மயக்கும் மாதிரி பொய்களையும் நடிப்புகளையும் நடத்தி தங்களது ஆசையை தீர்த்துக்கொள்வதும் தான் அவர்களது பொழுது போக்கு.

இந்த செயலுக்கு அவர்கள் அள்ளிவிடும் பொய்களையும் நடிப்புகளையும் பார்த்தால் அடக்க முடியாத நகைப்பாக இருக்கும். உதாரணம் என்று துவக்க காட்சிகளில் மத வித்தியாசம் பாராமல் எத்தனை வகையான திருமணமாக இருந்தாலும் செல்வதும். அவர்களது பழக்க வழக்கங்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும், அந்த பெண்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும் படத்தில் நல்ல கல கலப்பாக இருக்கும் ஆங்கிலத்தில்.

இப்படியே ஒரு நாள் ஒரு பெரிய அரசியல்வதியின் திருமணத்திற்கு செல்வார்கள். அங்கே நண்பர்களில் ஒருவனுக்கு ஒரு பெண் கிடைக்க மற்றவன் வலையை விரித்து வைத்து அலைவான். கடைசியில் அந்த பெண்ணும் இவனோடு பழகும் எண்ணத்தில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வர்கள்.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அவன் அவளிடம் காதல் கொள்வான். ஏற்கனவே திருமணம் அவளுக்கு நிச்சயக்க பட்டிருக்கும் நிலையில், அவளும் இவன் மீது காதல் கொள்வாள். எல்லாம் அமையும் போது இவர்கள் யார் என்ன எப்படி என்று அவளை கட்டிக்கொள்ள போகிறவன் கண்டு பிடித்து இவர்கள் இருவரையும் விரட்டி அடிப்பார்கள்.

காதலன் காதலியை அடைகிறானா பிறகு என்ன நடந்தது என்று எல்லாம் மிகவும் சுவாரசியமாக படமாக்கி இருப்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த படத்தை தான் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்று எடுக்க பார்த்திருக்கிறார்கள் இவர்கள்.


அந்த பெரிய அரசியல்வாதியாக தமிழி பிரகாசுராசு, ஆண்களையே பிடிக்காத பாத்திரம், அந்த ஆங்கிலபடத்தில் வரும் ஓரினசேர்க்கை மகன். ஏற்கனவே காதலில் ஏமாந்த பெண்ணாக வரும் பாத்திரம், ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட தலைவி, நாயகி பாத்திரமும் அவளே. மிகவும் ஆழமான நண்பன் இந்த 3 நகைப்பர்கள் என்று பாத்திரங்களை உருவாக்கி கொண்டு விட்டார்கள்.

கடற்கரையில், வீட்டில் என்றும் பார்க்கும் இடங்களில் எல்லாம் பெண்களை கூடுவதும், தலைவியின் அம்மா நண்பனை உறவுக்கு அழைப்பதையும் தமிழ் காட்டமுடியாமல் அதை வசனங்களில் வக்கிரமாக சேர்த்துள்ளார்கள் தமிழில்.



அது தான் தீராத விளையாட்டு பிள்ளையை பார்க்க சகிக்கவில்லை. திமுக குடும்பத்தினர்கள் சமீப காலமாக இப்படி ஆங்கிலப்படங்களை தமிழில் உருவி எடுக்கும் வேலைகளை கடமையாகவே கொண்டு செய்து வருகிறார்கள். இது எங்கே சென்று நிற்கிறது என்று பார்ப்போம்.

Tuesday, February 2, 2010

வைரமுத்துவிடம் சில கேள்விகள்......

எனக்கும் வைரமுத்துவிடம் சில கேள்விகள் உண்டு. ஆனால் கட்டாயம் இராசாவை சார்ந்த கேள்வி அல்ல. இராசாவை கங்கை அமரன் திட்டாத திட்டா நீங்கள் திட்டி விட போகிறீர்கள். அல்லது அவர் தூற்றாத தூற்றா நீங்கள் தூற்றி விட போகிறீர்கள்.

கமலகாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பை தடுத்தார் இராசா என்றும்

யாரு மெட்டை பிரதி(copy) எடுப்பது இல்லை என்று அனுவுடன் சேர்ந்துக்கொண்டு பாலுவின் முன்னாலே இராசாவின் மானத்தை வாங்கியதைவிடவா அல்பமாக வாங்கிவிட்டார் இவர்.

ஒரு காலத்தில் அமெரிக்காவில் தங்கி ஓய்வாக இருக்க வேண்டி திரைபடத்தின் வாசம் கூட அறியாத ஒரு தமிழரின் வீட்டில் தங்கி இருந்தாரம் இராசா. ஊருக்கு திரும்பும் போது அதிக விலைக்கு ஒரு கைகடிகாரத்தை வாங்கியதை பார்த்த அந்த தமிழர் கேட்டாராம் இதைவிட மிக குறைவான விலையிலே மிக தரமான கைகடிகாரம் கிடைக்குமே இத்தனை விலை எதற்கு கொடுப்பான் ஏன் என்று கேட்க. இது எனது தம்பிக்கு வாங்குகிறேன் என்று மட்டுமே சொன்னார் என்றும் சொல்வார்கள்.

அந்த தம்பி பேசும் பேச்சா இது, கைங்கை அமரனாவது பரவாயில்லை. அவர்களது பிள்ளை செய்த காரியம் இருக்கிறதே. அவர்களுக்கு பாடல்கள் என்றால் அது பாடல்களின் வரிகளை வைத்துதான் பிடிக்குமாம். இசையை வைத்து எல்லாம் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் சொன்ன புகார்களை எல்லாம் விட வைரமுத்து சொன்னவைகள் மிகக்குறைவே.

2009 ஆண்டுக்கான் பெட்னாவில் கலந்துகொள்ள சென்று இருந்தோம். வைரமுத்து 4 நாட்களுக்கு முன்னால் வந்தவர். ஆனால் விழா மேடைக்கு இரண்டாம் நாள் இறுதியில் தான் வந்தார். அவர் விழாவிற்கு வரும் முன் தான் ஒரு கவி அரங்கம் நடந்தது. அந்த கவியரங்கத்தில் கவிஞர் செயபாசுகரன் தவிர மற்றவர்களது கவிதைகள் மிக சுமாராகத்தான் இருந்தது. அங்கே வந்து ஒரு நல்ல கவிதையை வழங்காமல் சென்றது ஏன்.

செயபாசுகரனோ தனக்கு இது தான் முதல் வாய்ப்பு என்றாலும் எத்தனை அழகான கவித்தைகள், நாங்கள் அவரது கவித்தைகளுக்கு மகிழ்ந்தோம் அத்தனை மகிழ்ந்தோம். அவ்வளவு நகைச்சுவை அவரது கவித்தைகள். அது போல் இல்லை என்றாலும் ஒரு சிறு கவித்தையை தூவிவிட்டு சென்று இருக்கலாமே ஏன் அப்படி ஏதும் செய்யவில்லை.

மேலும் கடைசி நாளில் நடந்த இலக்கிய கூட்டத்தில், இலக்கியத்தை அலசு அலசு என்று அலசினார்களே எங்கே போனீர்கள் என்று. அந்த பக்கம் கூட தலைவைத்து கூட படுக்கவில்லை. ஏன் ஏன் ஏன்........

நல்ல தமிழில் பேச கூட முடியவில்லை என்றாலும்(கனிகாவும், செயசிறியை தவிர, இவர்கள் இருவருக்கும் இவ்வளவு அழகாக தமிழ் வரும் என்று எங்களுக்கு கனவிலும் தெரியாது. எத்தனை அழகான உச்சரிப்பு, எத்தனை அழகான வார்த்தைகள். அதிலும் தமிழ் வார்த்தைகளை கேட்டு அவர்கள் அடித்த நக்கல், அமெரிக்க தமிழ்கர்களின் தமிழ் புலமையை வெளிச்சம் போட்டு காட்டியது.) விழாவிற்கு வந்த திரைபட கலைஞர்கள் அனைவரும் எத்தனை அழகாக இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். தன்னை கேலி செய்த்தவர்களை அனுராத என்ன அழகாக கையாண்டார் அன்றைய இரவு. நீங்கள் ஏன் எதிலும் கலந்துகொள்ளாமல் வெளியேறினீர்கள்.

இராசாவை திட்டுவதாலோ அல்லது புகழ்வதாலோ அவரது புகழ் குறையப்போவதும் இல்லை. உங்களை பற்றி பத்தி பத்தியாக புகார் எழுதுவதாலோ உங்களது புலமை பழுது படப்போவதும் இல்லை. ஆனால் எனது கேள்விகளுக்கு எனக்கு பதில் வேண்டும். எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நாங்கள் இருந்தோம். மைல்சாமி அவர்களுக்கு கொடுக்காத பாதுகாப்பை வழங்கி எல்லாம் உங்களை மேடைக்கு தாங்கி கூட்டி கொண்டு வந்தார்களே ஏன் கவிதை சொல்லாமல் சென்றீர்கள் கவிஞரே, ஏன், எதற்கு.........