Thursday, January 22, 2009

வாரணம் ஆயிரம்- ஆங்கிலப்படம் கிலிக்கு(CLICK) படத்தின் தமிழாக்கம் (கம்பனாக்கம்)



இந்த படத்தின் பெயரை பார்த்ததில் இருந்தே ஏதோ ஒரு வித்தியாசமான படம் என்று தான் தோன்றியது. படத்தை பார்க்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே ஏதோ இரு சாயல் தெரிகின்றதே என்று இருந்தது ஆனால் உறுதியாக தெரியவில்லை.

படம் மெல்ல அதன் உச்சத்தை நோக்கி நகரும் போது, அதுவும் அந்த காதலி வெடிகுண்டு விபத்தில் இறந்த பிறகு திரைக்கதையும் கதையும் யாருக்கும் புரியாமல் அலையும் அந்த வேளையில் தான் புரியவே ஆரம்பித்தது.

கிலிக்கு படத்தின் கதை ஒரு நகைச்சுவை வகையை சேர்ந்தது. அதாவது ஒரு பெரிய செய்தியை அங்கே மிகவும் நகைப்பாகவும் அதே சமயத்தில் அனைவருக்கும் உறைக்கும் விதமாகவும் சொல்லி இருப்பார்கள்.

கிலிக்கு படத்தின் கதை இது தான். கதையின் நாயகன் ஒரு கட்டிட கலை வல்லுனர். அவர் ஒரு நகர மேம்பாட்டு திட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் எதிர்பார்க்கும் பணி உயர்வோ சம்பள உயர்வோ இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார். அந்த நிலையில் பக்கத்து வீட்டு பிள்ளை இவரது பிள்ளைகளை அவனது உல்லாச பொருட்களை காண்பித்து வெறுப்பேத்தும் காட்சியில் நாயகனின் வறுமை நிலைகளை எடுத்து காட்டி இருப்பார்கள்.

அந்த நிலையில் என்ன செய்வது என்றே தெரியாமல் எரிச்சலில் தொலைக்காட்சியில் படம் பார்க்க நினைகையில் தொலை கட்டுப்படுத்தி (Remote Control) இவரை வேலை பார்க்காமல் படுத்தும். வேறு ஒரு தொகட்டுப்படுத்தியை வாங்க கடைக்கு செல்லும் போது அவருக்கு ஒரு மாய கட்டுப்படுத்தியாக அந்த தொகட்டுப்படுத்தி கிடைக்கும். அதை வைத்துக்கொண்டும் எதை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்று சொல்லி கொடுப்பார்கள்.

அந்த கருவியை வைத்துக்கொண்டு நாயகன் தனது வாழ்க்கையின் வளமான பகுதி எங்கே எங்கே என்று தேடித்தேடி பார்ப்பான். அந்த செயலில் தனது முழு வாழ்க்கையும் தொலைப்பான். அளவுக்கு அதிமாக குண்டாகியதும். அவனது மனைவி அவனை விட்டு மணமுறிவு பெற்று சென்றதும் கூட அவனுக்கு தெரியாமல் போகும்.

இந்த ஓட்டத்தின் உச்சமாக அவனது பிள்ளையின் திருமண விழா வைபத்தில் திடீர் என வருவான் நாயகன். அப்பொழுது அவனது மகளை அவனுக்கு அடையாளம் தெரியாமல் அவள் தான் மகனின் மணமகளா என கேட்ப்பான். அந்த சம்பவத்தில் அவள் அப்பா என்று நாயகனை அழைப்பதாக என்னி பார்க்கையில் தனது மனைவியின் இரண்டாவது கணவனை தான் அழைத்தேன் என்று மகள் சொல்ல நெஞ்சுகு போகும் ஒரு நரம்பு தெரித்து மாரடைப்புக்கு ஆளாவான்.

அந்த கால கட்டத்தில் 36 மணி நேரம் கழித்தி மருத்துவமனையில் விழித்து பார்க்கும் போது, மகள் 36 மணி நேரமும் இவனுடன் அங்கே அருகிலேயே அமர்ந்து இருந்ததாக மகன் சொல்ல. மகளை பார்த்து நாயகன் கேட்ப்பான் அப்பா என்று அவனை அல்லவா சொன்னாய் என்று.

மகள் சொல்வாள், அவர் என்னை வளர்த்தவர் அவர், நீங்கள் என்னை பெற்றெடுத்தவர் நீங்கள். எங்களை வீட்டு நீங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் நீங்கள் எனக்கு தந்தை இல்லை என்று ஆகிவிடாது. நீங்களும் தான் எனக்கு அப்பா, எனக்கு 2 அப்பா என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு தூங்க செல்வாள் அந்த பெண்.

இது வரையில் பொருளும் புகழும் மட்டுமே வாழ்க்கை என்ற சிந்தையில் இருந்தவனுக்கு முதல் முறையாக குடும்பம் தான் வாழ்க்கை. மற்றவைகள் எல்லாம் பிறகு தான் என்றும், தன்னை இந்த நிலையில் விட்டு விட்டு தனது மகன் தேனிலவுக்கு செல்லப்போவது இல்லை, நாளை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி செல்லும் மகனை. தடுத்து நிறுத்தி நீ தேன்னிலவுக்கு செல் என்று கொட்டும் மழையில் உயிர் போக நாகயன் சொல்வதாக அங்கே காட்சி முடியும்.

படத்தில் அது வரையில் வந்த நகைசுவைகளை, நாயகன் தனது தந்தை இறப்பதற்கு முன் நாயகனை பார்க்கவருவதும். அவனது தந்தை பேச முற்படுகையில் முகத்தில் அடித்தாற்போல் பதில் பேசி முகத்தை கூட பார்க்காமல் பேசி அனுப்பும் மகனின் நிலைக்கு வறுந்தி இறக்கும் அந்த தந்தையை கதையை பின்னோக்கி சென்று பார்க்கும் நாயகனின் வலியும்.

தனது பெயர் புகழ் என்று இருந்தவன் தனது மகன் கட்டிய கட்டிடத்தை பார்த்து வியந்து. அவனது திறனை இத்தணை நாட்க்கள் அறியாமல் இருந்தோமே என்று நெகிழும் கட்டத்திலும். பிறகு உச்சக்கட்டத்தில் வரும் அத்தணை காட்சிகளும் பார்ப்பவர்களை நாயகனோடு சேர்த்து வருந்த வைக்கும் அளவிற்கு படம் இருக்கும்.

இப்போது வாரணம் ஆயிரம் கதைக்கு வருவோம், கிலிக்கில் வரும் நாயகனின் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அப்படியே காட்டி இருப்பார் கௌதம் கம்பனாக்கமாக. அப்படியே ஈ அடிச்சான் பிரதியாக இல்லாமல் இந்திய வழியில் கொடுத்து இருக்கிறார்.

மேலும் கிலிக்கில் நாயகன் ஆடும் நகைப்பு ஆட்டங்களை மகனின் பாத்திரமாகவும், நெகிழ்ச்சி மிக்க பாத்திரத்தை வயதான தந்தையாகவும் உருவாக்கியுள்ளதை கிலிக்கு படம் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்துவும் அந்த கிலிக்கு படத்தின் உச்சதில் வரும் அந்த அசத்தலான காட்சியில் தனது பெற்றோரின் படுக்கை அறையில் நுழைந்து அவர்களது படுக்கையில் ஒரு சிறுவனைப்போல் குதித்து தனது பெற்றோர்களை எழுப்பி எப்ப எல்லாம் உங்களுக்கு என்னோடு சாப்பிட தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் வாருங்கள். எப்போதெல்லாம் வெளியே செல்ல வேண்டுமோ சொல்லுங்கள் என்று மீண்டவனாக சொல்லும் காட்சிகளை அப்படியே இளையவனின் பாத்திரத்தின் வசனங்களில் காணலாம்.

கிலிக்கு படத்தின் சாயல் கொஞ்சமும் தெரிந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக கதை அமைத்து இருபது தெரிகின்றது. அதுவும் கிலிக்கு படத்தின் திரைகதை தீர்ந்ததுன் பிறகு எப்படி படத்தை முடிப்பது என்ற திணரல் அவருக்கு. அந்த திணரலில் தான் படம் காசுமீருக்கும் டெல்லிக்கும் அமெரிக்காவுக்கும் என்று கதை பிய்ந்து தொங்குகிறது. சம்பந்தமே இல்லாம்லும் படத்தில் ஒட்டாமலும் வரும் அந்த கோர்வைகள் கிலிக்கில் இல்லை அந்த கதையோடும் அது பொருந்தாது என்று அப்பட்டமாக காட்டுகிறது.

பச்சைகிளி முத்துசரம் டிரெய்டு(Derailed) படத்தின் அட்டை ஈ அடிச்சான் பிரதி என்று சொன்னோம். அதனால் இந்த முறை அந்த பெயர் வாங்காமல் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஆனாலும் பூனை வெளியில் வந்து விட்டதே கௌதம். அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.

Wednesday, January 21, 2009

நடந்து முடிந்த திருமங்கலம் தேர்தல் சொல்வது என்ன

கால ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வருவதும், அந்த கொள்கை மாற்றங்கள் கட்சியின் அடிப்படை கொள்கைகளை பாதிக்கா வண்ணமாக இருப்பதும் திமுக இது வரையில் கடைபிடித்து வந்த பழக்கம். ஆனால் அண்மை காலமாக ஈழம் தொடர்பாக தனது கொள்கைகளில் திமுக திணறி வருவதை அனைவரும் பார்த்துவருகிறோம்.

ஈழத்திற்கு சாதகமான ஒரு கொள்கை முடிவை திமுக எடுத்தால், தீவிரவாதத்தையும் பிரிவிணைவாதத்தையும் அரசே செய்கிறது என்று சொல்லி ஆட்சியை கலைக்கும் வேலைகளில் முழுவீச்சில் எதிர்கட்சிகள் இறங்கும். அதற்கு பக்கபலமாக நீதித்துறையும், உளவு நிறுவனங்களும் கட்டாயம் செயல்படும். இதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. என்ன தான் நீதியும் அவசியமும் இருப்பினும் இந்த ஒரு காரணத்தை காட்டி திமுகவை தூக்கி எறிய அனைவரும் துடிப்பது தெரியாமல் இல்லை.

இதை உணர்ந்த திமுக தனது கொள்கைகளையும் செயல்களையும் கவனமாக எடுத்து வைக்கிறது. வேலை சுலபமாக முடிந்துவிட்டது என்று தான் இருந்து இருக்கும் கலைஞர் "ஆட்சியை துறக்கவும் தயார்" என்று சொன்னபோது. ஆனால் அந்த கண்ணியில் திமுக சிக்காமல் தப்பித்ததை பொறுக்கமுடியாத மக்கள் தற்பொழுது திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தமிழைபற்றியும், தமிழர்களை பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாத இவர்கள் திமுகவை தமிழ் தமிழ் என்று பேசிய கட்சி எங்கே என்றும் கேட்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்கள் மேல் கவலையோ அக்கறையோ இல்லை. ஆனால் திமுக எதுவும் செய்யமுடிய வில்லையே என்று கேலிபேச இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. நமக்கு தெரிந்த வகையில் சொல்வதென்றால் ஆடு நனையுதேன்னு ஓணாய் அழுகுதாம் என்று சொல்வார்களே அது போல.

ஆட்சியை துறப்பேன் என்று நாடகம் ஆடினார் பாருங்கள். மத்தியிலும் மா நிலத்திலும் நாங்கள் இருந்தால் தான் நல்லது என்று சொன்னார்களே இப்போ என்ன சொல்கிறார்கள். உண்மை தமிழன் யார் என்று இப்போது தெரிகிறதா. பதவி வெறிபிடித்தவர் கலைஞர், தனது பதவிக்காக தமிழர்களை சாகவிட்டு வேடிக்கைபார்க்கிறார் பாருங்கள். தனது குடும்பத்துகாக என்று இருந்திருந்தால் இன்னேரன் என்ன எல்லாம் செய்து இருப்பார், ஆனால் ஈழத்திற்கு என்றதும் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் பாருங்கள்.

சீமான் பேசினார், கைது செய். அமீர் பேசினார், கைது செய். கொளத்தூர் மணி பேசினார், கைது செய். திருமாவளவன் பேசினார் ஏன் இதுவரை கைது செய்யவில்லை. முதல்வரை வைத்தே அவரது அறிக்கையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதும் எழுதுவதும் செயல்படுவதும் தவறு என்று சொல்ல வைப்பது. இன்னமும் எப்படி எல்லாம் சிக்கல்களை உருவாக்கமுடியுமோ அவ்வளவு சிக்கல்களை உருவாக்கி வைப்பது இவர்களது தற்பொழுதைய தலையான வேலையாக இருக்கிறது.

இங்கே நாம் ஒன்றை கவனமாக பார்க்கவேண்டும். எது ஒன்று நடந்தாலும் திமுக வீட்டுக்கு அனுப்பபடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தவிர வேறு ஒன்றும் இவர்கள் கேட்பது இல்லை.

மின்சார தட்டுப்பாடு, ஆட்சியை கலையுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்சியை கலையுங்கள். மழை அதிகமாக பொழிகிறது, ஆட்சியை கலையுங்கள். மழை நீர் வடியவில்லை, ஆட்சியை கலையுங்கள். கலவரம் வெடிக்கிறது, ஆட்சியை கலையுங்கள், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. எதிர்கட்சிகள் வன்முறையில் ஈடுபடமுடியவில்லை, காவல்துறை முதல்வரி ஏவல் துறையாக செயல்படுகிறது ஆட்சியை கலையுங்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது, ஆட்சியை கலையுங்கள்..........

இந்த நீண்ட பட்டியலில் இன்னமும் ஒன்றே ஒன்று தான் பாக்கி, எனக்கு பசி எடுக்கிறது அதற்கு காரணம் திமுக அரசுதான் உடனே அரசை கலைக்கவேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் பாக்கி. அதை தவிற எத்தணை கீழ்த்தரமான கோரிக்கைகளை வைக்கமுடியுமோ அத்தணையையும் வைத்தாகிவிட்டது.

இந்த கோர கரளோபகரத்தின் மத்தியில் திடீர் என்று திருமங்கலம் தேர்தல். அதுவும் எப்படி திமுக மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. மக்கள் திமுக அரசை தூக்கி எறிய நினைக்க துவங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக திருமங்கலத்தில் திமுக தோற்கும் பாருங்கள் என்ற முகவுரையுடன் தொடங்கப்பட்டது.

எத்தணை விதமான கீழ்தரமான செய்கைகளை செய்ததோ சென்னை மாநகராட்சி தேர்தலில், அதையும் விட பலமடங்கு அதிகமான கீழ்தரமான செயலில் இந்த கூட்டம் துவக்கத்திலேயே இறங்கியதை பார்க்க முடிந்தது.

அந்த தேர்தல் வரும் வரையில் எங்கே இருந்தார் என்றே யாருக்கும் தெரியாமல் வனவாசம் செய்தவர். மீளா தூக்கத்தில் இருந்து மீண்டவர் போல் தனது பழைய கீரல் விழுந்த இசை தட்டை எடுத்துக்கொண்டு மேடைகள் ஏறினார். அந்த கட்சியினர் பாவம் மறுபடியும் எல்லா இடங்களிலிம் கீழே விழுந்து உருண்டு உருண்டு தரையை சுத்தம் செய்ய தொடங்கினார்கள்.

இந்த தேர்தலின் மூலமாக திமுகவிற்கு ஒரு இரகசிய பொறி வைக்கப்படது. அந்த பொறியில் திமுக சிக்கும் அப்படி சிக்குங்கால் அதையே காரணமாக காட்டி அரசை கலைத்துவிட வேண்டும் என்று மீண்டு அந்த கூட்டம் காத்துகிடந்தது தான் மிச்சம். அந்த பொறியில் சிக்கிய ஒரு சிலவற்றை வைத்துக்கொண்டு நீதிமன்ற படிகள் ஏற அந்த கூட்டம் சொல்வதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைத்துவிட்டோம் திமுகவை, மக்களும் குழம்பியுள்ளனர். இந்த வேளையில் இந்த தேர்தலில் ஒரு வெற்றியை பெற்றுவிட்டால், மக்கள் திமுகவை தூக்கி எறிய நினைத்துவிட்டாகள் என்ற மாயையை பரப்பிவிடலாம் என்ற பொறிதான் அந்த பொறி. அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மண்விழும் என்று அந்த கூட்டம் நினைத்து இருக்காது தான்.

இல்லை என்றால் எந்த தைரியத்தில் 20 கோடிக்கு மேல் பணத்தை தண்ணியாக அள்ளி அந்த ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் கொட்டி தீர்த்து இருக்கும். அவ்வளவு பணமும், ஆள்பலமும், கூட்டணி தலைவர்கள் என்று ஒரு பெரிய பெருங்கூட்டமாக சென்று முட்டி மோதி பார்த்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியுள்ளது அந்த கூட்டம்.

இந்த தேர்தல் அந்த கூட்டதின் சதிவேலை சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பத்ற்கான ஒரு சோதனை களம். அந்த களத்தில் அவர்களது கணிப்பு சரியாக வரும் என்ற அதிதீர நம்பிக்கையில் மிகவும் அதிதீரமாகவே தனது வார்த்தைகளினாலேயே தனது சதிவேலைகளை வெளியிட்டிருக்கிறது அந்த கூட்டம்.

இதை புரிந்துகொள்ளாத வலைஞர்களும் சரி, மற்றவர்களும் சரி திமுகவையும் கலைஞரையும் வசை பாடுவதும் அறிகை விடுவதுமாக இருக்கிறார்கள். அதோடு மட்டும் நில்லாமல் சவாலும் கூட விடுகிறார்கள். அந்த கூட்டத்தின் பொறியில் திமுக சிக்கவில்லை என்றாலும், இந்த வலைஞர்களும் மற்றவர்களும் சிக்கியது அந்த கூட்டத்திற்கு பாதி வெற்றியே.

இந்த வலைஞர்களை போல் பொதுமக்களையும் சிந்திக்க வைப்பதில் கட்டாயம் அவர்கள் வெற்றி கொள்வார்கள் என்றே தெரிகிறது.

முன்னே போனால் கடி, பின்னே போனல் உதை என்ற பிழைப்பாக தான் உள்ளது திமுகவின் நிலை இப்பொழுது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது திமுக என்று பார்ப்போம். என்ன வைகையான கையாளுகையுடன் திமுக தலைமை வருகிறது என்று பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் இது குழந்தைக்கு கூட தெளிவாக தெரிந்த ஒன்று.

என்ன இந்த பசப்பு சதிவேலைகள் சரியாக செயலாக்கவில்லை என்று பழைபடி தமிழகத்திலே அங்காங்கே குண்டுகளை வெடிக்க வைத்துவிடக்கூடாது என்று தான் பயமாக இருக்கிறது. அந்த கூட்டம் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற தமிழகத்தையே கூட கொளுத்தி அழிக்ககூட தயங்காத கூட்டம் அது தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. எத்தகைய சதிவேலை எல்லம் நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

சிலிர்த்து கொண்டு புலி பாய்ச்சலில் சென்று இந்தவிதமான சதிகளை வென்று வெற்றி வாகை சூடுகிறதா. அல்லது இந்த அறிவு கெட்ட கூட்டத்திற்காக பட்டது எல்லாம் போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறதா திமுக என்று பார்ப்போம். எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு வரபோகின்ற நாடாளுமன்ற தேர்தலும் அதற்கு பிறகு வரும் சட்டமன்ற தேர்தல்களும் மிக மிக சோதைனையாக காலங்களே. என்ன தீர்வு திட்டங்களுடன் செயலாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.