Tuesday, August 19, 2008

பாக்கிட்தான் ஒரு மக்களாட்சி நாடுதான், மேலதிக விளக்கங்களுக்கு அமெரிக்காவை கேளுங்கள்.

ஒருவர் ஆட்சியை விட்டு சென்றால் நேராக துபைக்கு சென்று தான் வாழவும் அரசியல் நடத்தவும் முடியும் என்ற நிலை அந்த நாட்டில். அந்த நாடுதான் அமெரிக்கா உலகத்தில் மக்களாட்சியை மீள் கொள்ள போராடும் போராட்டத்தில் ஆசியாவில் நண்பன்.

இந்த பொருப்பற்ற நாட்டினிடம் அணு ஆயுதம் இருப்பது குழந்தையின் கையில் கிடைத்த கூர் வாளை போல் ஆகையால் அதை ஐ நா பெற்றுக்கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கும், அந்த நாட்டின் சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பொருளாதார தடையை கொண்டு வரவேண்டும் என்று இந்தியா ஐ நா விடம் கோரிய போது. கோபி அன்னன் சொன்னார்.

மிகை அதிக பொருளாதார நெருக்கடிக்கு தள்ளினால் அந்த நாட்டின் அணு ஆயுதம் தீவிரவாதிகளின் கைக்கு சென்றுவிடும் அதனால் முடியாது என்றார். அப்படி இருந்தும் அமெரிக்கா சதாமின் மீது எடுத்த நடவைக்கைகளில் ஒரு அரை சதவிகிதம் கூட இந்த நாட்டின் மேல் எடுக்கமல் இருப்பதர்க்கு காரணம் அவர்கள் இந்தியர்கள் போல் அதிகம் சாப்பிடுவதில்லை என்ற காரணம் போலும்.....

பாக்கிட்தானின் அணு ஆயுதம் அமெரிக்காவை தாக்காமல் இருந்தால் சரிதான்.....

Thursday, August 14, 2008

குசேலன் -- திரைவிமர்சனம்

வெயில் என்று ஒரு படம் பசுபதி நடத்தது. அந்த படத்தில் மிகவும் இயல்பான நடிப்பும் கதையும் இருக்கும். தொலைத்து விட்ட அன்பும் குடும்ப பாசமும் தேடியும் கிடைக்காத நாயகனாக பசுபதியின் வேடம் அந்த படம். கிட்டத்தட அதே மாதிரியான ஒரு கதையமைப்பு இந்த படத்தில். படம் துவங்கியது முதல் இறுதி வரை தனக்கு என்று ஒரு கொள்கைகளுடன் வாழும் ஒரு நாயகனாக பசுபதி. நிகழும் அத்தனை பஞ்சத்தின் நடுவிலும் தனது நெருங்கிய நண்பனான கிருட்ணனிடம் உதவி என்று கேட்க்காத குசேலனின் குணத்தில் பசுபதி. அந்த கதையில் கிருட்ணன் குசேலனின் பஞ்சத்தை தீர்க்கும் கதை தான் இந்த குசேலனின் கதை.

அசோக் குமார் என்ற நடிகனி பூகழ் பாடவே படத்தின் அனைத்து பாத்திரங்களும் எழுதப்பட்டு இருப்பதாகவே வெளிப்படையாக தெரியும் அளவிற்கு வாசு இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அசோக் குமார் வரும் இடங்கள் தவிற அத்தனை இடங்களிலும் அவரை பற்றி மற்றவர்கள் பேசுவதாக வரும் படி இருப்பதை குறைத்திருந்தால் படம் கொஞ்சமாவது தப்பி இருக்கும். ஆனால் பாவம் வாசுவிற்கு புதிதாக திரைக்கதை அமைப்பதில் செலுத்தியதை விட இரசினையை புகழத்தான் அதிக சிறமம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த படத்தை பார்க்கும் போது ஏனோ அன்புள்ள இரசினிகாந்து படம் மனதில் வந்து போவதை தவிற்க முடியவில்லை. அந்த படமும், பாடலும் மனதில் நிற்பதை போல் இந்த படத்தில் வரும் நகைச்சுவைகள் கூட மனதில் நிற்கவில்லை.

இரசினியி பெயரை சொல்லி ஒரு படம், அதும் இவ்வளவு மோசமான படம்.......... ஒன்றும் சொல்வதற்கு இல்லை இந்த படத்தில்........

Wednesday, August 13, 2008

கொடா நாட்டுக்கு செ குட்பை சென்னது ஏன்???? ("புழுதி புயல்" )

இப்படி ஒரு தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் இதழில் ஒரு செய்தி வந்துள்ளது. அதிலே அந்த அம்மா அங்கு இருந்து கிளம்ப காரணமாக அமைந்த கட்சி மாறாட்டம் என்றும் எழுதியுள்ளார்கள். அதிலே அதிமுக தரப்பில் சொல்கிறார்கள், திமுக உறுப்பினர்கள் தாமாகவே அவர்களது அறிவில் உதித்து அதிமுக மக்களை சென்று நேரில் பார்த்து எங்களுக்கு அதிமுகவில் சேர்ந்தே ஆக வேண்டும் என்றும். அப்படி இல்லை என்றால் எங்களது உயிர் உடலில் தங்காது என்றும் சொன்னதால். வேறு வழியே இல்லாமல் பாவம் அந்த அதிமுக மக்கள் அவர்களை கட்சி பேதம் பார்க்காமல், அவர்களை அதிமுகாவில் இணைக்க அழைத்து சென்றதுன் இல்லாமல். உடனேயே மாலையிலேயே அந்த செய்திகளை மாலை இதழ்களில் வெளியாகவும் ஏற்பாட்டுகளையும் செய்தார்கள் பாவம் வழியற்றவர்கள்.

இப்படி சொன்னவர்கள் இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அவர்கள் மேலும் சொல்கிறார்கள், இந்த 2 உறுப்பினர்கள் அதிமுகவில் சேர்ந்ததை பொறுக்க முடியாத கலைஞர் அதிமுகவின் 3 உறுப்பினர்களை விலைக்கு அந்த பகுதியில் இருக்கும் சந்தை பத்து தரகர்களை பிடித்து கையின் மேல் துண்டு போட்டு விரல் பிடித்து விலை பேசி தரகு கொடுத்து வாங்கியதாக சொல்லி இருக்கிறார்களே பாருங்கள் அது தான் அவர்களது நாகரீகத்தின் உச்சம்.

என்ன ஒரு கண்டு பிடிப்பு பாருங்கள். அந்த அம்மா அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களை குளிரூட்ட ஏதாவது ஒன்று செய்யவேண்டுமே என்று தத்தகா பித்தகா என்று இப்படி ஒரு மூக்கருப்புக்கு ஏற்படு செய்தார்கள் போலும்.

ஒரு கட்சியின் தலைவி, தமிழகத்தின் நிறந்தர முதல்வர் என்று அவரது கட்சி மக்களால் போற்றப்பெற்றவர், இனிமேல் மா நில அரசியலில் எல்லாம் அவரது தகுதிக்கு குறைவு அதனால் இனிமேல் இந்தியாவின் தலை எழுத்தை இனி இவரால் தான் எழுதமுடியும் என்று அவரது கட்சியினரால் பாராட்டப்படும் செயலலிதா. தான் தங்கி இருக்கும் இடத்தில் 2 ஊராட்சி மன்ற உறுப்பினர்களது கட்சி மாறாட்டத்தை செய்து முடிக்க தெரியவில்லை. கட்சி மக்கள் சொன்னால் அந்த செயல்களின் முடிவுகள் எப்படி வரும் என்று கூட சரியாக கணிக்க முடியாத இந்த அம்மையாரை போய் தினமலர் சொல்கிறது அரசியலில் புயல் அடிக்குமா என்று. ஒரு வேளை "புழுதி புயல்" என்று சொல்ல நினைத்து இருப்பார்களோ !!!!!!!!!

Tuesday, August 5, 2008

இராமாயணம் இந்தியாவில் நடந்த கதையா, இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்


நீண்ட நாட்களாகவே நடந்துவரும் சர்ச்சை இது. அடிப்படையில் ஒரு பெயர் இராமன், இந்த ஒரு பெயரை வைத்துக்கொண்டு ஒரு கட்சி நாட்டின் ஆட்சியையே பிடித்தது என்றால் பாருங்கள். அந்த கதையில் வரும் இந்த பாத்திரத்தை மையப்படுத்தி இன்னமு எத்தனை மூட பழக்கங்கள் நாட்டில்.
இந்த குழப்பத்தின் உச்சம், உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் செய்தி. பலமுறை தகவல் அனுப்பியும் பதில் சொல்லாமைக்கு கைது நடவடிக்கை எடுப்போம் என்று.

வடக்கில் தூங்கி கொண்டு இருந்த அரசியல் தலைவர்கள் எல்லம் இப்பொழுது இராசுவரத்தையே தங்களது தொழில் முறை தலை நகரமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மாதம் 2 முறையேனும் யாரேனும் ஒருவர் வருவது. அறிக்கை விடுவதும் அந்த அறிக்கையின் அப்பத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அந்த பித்தத்தின் உலரல்களாக இன்றைக்கு மத அரசியல்கள் நடந்தேறி கொண்டு இருக்கிறது.
இராமன் பிறந்த இடம் என்று அந்த இடத்திற்கு பூட்டு போட்டு தசாப்தங்கள் தாண்டிய நிலையில், இப்போது இராமன் பாலம் என்று சொல்லி ஒரு பெரிய பூட்டோடு அந்த அரசியல் வாதிகள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதிலே இதை தேசிய சின்னமாக அறிவிக்ககோரும் நடவடிக்கையிலும் இந்த அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்துக்கு சொல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோருகிறது. அதற்கு ஆளும் மத்திய அரசோ ஒரு குழுவை அமைத்து விசாரிக்க சொல்கிறது.

இதில் இன்னம் ஒரு வேடிக்கை என்ன என்றால், தமிழ் புத்தாண்டை பொங்கலுக்கு மாற்றிய போது எழுந்த வழக்கில் ஒருவர் வாதிடுகிறார், தீபாவளியை மாற்றிக்கொண்டாட சொல்லுமா அரசு என்று. பாவம் அவருக்கு தெரியாது போலும். வடக்கிலும் தெற்கிலும் தீபாவளி கொண்டாடும் நாள் வேண்டும் என்றால் ஒன்றாக இருக்கலாம் ஆனால் காரணங்கள் ஒன்று அல்ல என்று அவருக்கு தெரியாது போலும்.

தமிழகத்தில் சின்ன பிள்ளைகளை கேட்டால் கூட சொல்லும், உலகை பாயாக சுருட்டிய நரகாசூரன், உலகை கடலுக்கு அடியில் கொண்டு மறைத்துவைத்துக்கொண்டான். அதை கடவுள் சென்று அவனை அழித்து உலகை மீட்டுக்கொடுத்தது என்று சொல்வார்கள். அப்படி இறக்கும் நிலையில் அந்த நரகாசூரன் கடவுளிடம் சொன்னானம் இப்படி தான் இறந்ததை விழாவாக கொண்டாடி மக்கள் மகிழட்டும் என்று.

எங்கே இதே கேள்வியை வடக்கே சென்று கேட்டு பாருங்கள் அவர்கள் ஏன் தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்று. அவர்களுக்கு தீபாவளி என்றால் இராமன் காட்டில் இருந்து நாடு திரும்பிய போது மக்கள் அவர்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி இருளை நீக்கி, இருள் நீங்கிய நாளாக கொண்டாடுவார்கள்.
இத்தணை தலைமுறைகள் கடந்தும் தமிழகத்தில் இந்த தீபாவளி இப்படியே கொண்டாடும் காரணம் என்ன. என்ன தான் தெரிந்து இருந்தாலும் மதத்தலைவர்களும் சரி மற்றவர்களும் சரி, இது வரையில் தமிழகத்து தீபாவளிவை அப்படியே விட்டு வைத்திருப்பதின் காரணம் என்ன. உச்ச நீதிமன்றம் ஆதாரத்துடன் எந்த கதை உண்மை என்று ஆராய்ந்து சொல்லட்டும் பிறகு எந்த நாள் தமிழ் புத்தாணடை கொண்டாலாம் என்று ஆராய்வோம்.

சரி சரி, இதில் இராமாயணம் இந்தியாவின் கதையா என்ற கேள்வி எங்கே வந்து என்று நீங்கள் கேட்க்கும் கேள்வி காதில் விழாமல் இல்லை. அந்த செய்திக்கு வருவோம்.



கொஞ்ச நாளைக்கு முன் 10,000 கிமு என்று ஒரு ஆங்கிலப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த படம், 10,000 கிமுக்கு முன் நடந்த ஒரு கதையை அந்த கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் ஒரு முயற்சியாக படமாக்கி இருந்தார்கள்.

கதை நடக்கும் களமாக அவர்கள் காட்டும் இடங்கள் இரு பனிமலையில் துவங்கும் படம் ஒரு பாலைவனத்தில் ஒரு பிரமீடு கட்டும் இடத்தில் சென்று முடிகின்றது. இடையில் ஒரு சமவெளிகளையும் காட்டுகிறார்கள்.
இதற்கு இராமாயணத்திற்கும் என்ன சம்பந்தம், படத்தின் கதையை சொன்னால் அது விளங்கும்.

படத்தின் துவக்காட்சியில் ஒரு பனிமலையில் ஒரு சிறு குழு ஒன்று மேமோத் வேட்டையாட போகிறது. அப்போது அந்த குழுவின் தலைவன், (இளைஞாகத்தான் இருக்கிறார்) சொல்கிறார் யார் மேமோத்தை அதன் இதயத்தை குத்தி வீழ்த்துகிறார்களோ அவர்கள் இந்த வெள்ளை ஈட்டியை உரிமை கோரலாம். அதே சமயம் அந்த குழுவில் இருக்கும் அழகு யுவதியையும் அடையலாம் என்று தெரிவிக்கிறார்.



இந்த மேமோத்தை தான் இராமாயணத்தில் யாராலும் அசைக்ககூட முடியாத வில் என்று சொன்னார்கள் போலும்.

மெமோத்துகளை கொன்று உண்டு வாழ்க்கை நடத்தும் அந்த குழுவில் வெற்றிகரமாக வேட்டையாட தெரிபவனை தலைவனாக தேர்ந்தெடுப்பது இயற்கையே. அதே போல் வில்லெடுத்து வேட்டையாடும் கூட்டதில் வில்வீரனை தேர்ந்தெடுப்பதும் இயற்கையே, ஆனால் யாராலும் அசைக்கக்கூடாத வில் என்று சொல்ல தேவை என்ன வந்தது இந்த மெமோத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும்.

ஒரு வழியாக அந்த கூட்டு வேட்டையில் கதையின் நாயகன் மெமோத்தை கொன்று வெள்ளை ஈட்டியையும் அந்த பெண்ணையும் அடைகிறான். அன்று இரவு வெளியில் சென்று இருக்கும் வேளையில் அங்கே வந்த ஒரு கொள்ளையர் கூட்டம் அந்த பெண்ணையும் இன்னமும் சிலரையும் பிடித்து சென்று விடுகிறது. சீதையை இராவணன் கவர்ந்து சென்றது போல.
பிறகு இதை அறிந்த நாயகனும் அந்த குழுவின் தலைவனும் அந்த மக்களை மீட்கும் வண்ணமாக பயனம் புறப்படுகிறார்கள். இராமனும் இலக்குவனும் போல.

அந்த பெண் தான் போகும் பாதை தன்னை தேடி வருபவர்களுக்கு தெரிய வேண்டும் என்று தனது ஆபரணங்களை அங்கங்கே விட்டு செல்வாள் இராமயணத்தில் விட்டு செல்வதை போல.


இப்படி செல்லும் இந்த இருவரும் ஒரு இடத்தில் நாயகியை பார்த்து காப்பாற்ற நினைக்க அந்த சமவெளியில் அவர்கள் இருவரையும் கொல்ல முனைகிறது அந்த கூட்டம். அங்கே இருக்கும் இராட்ச்சச நெருப்புக்கோழிகள் அவர்களை வேட்டையாட முனைகிறது. இராமாயணத்தில் பெரிய கழுகுகளுடன் இராவணன் போராடி சடாயு பரவையை வெட்டியது போல. சண்டையிடும் பாத்திரம் தான் வேறு ஆனால் சம்பவம் ஒன்று தான்.

பிறகு இருவரும் ஒரு கிராமத்தில் நுழைகிறார்கள். அங்கே வரும் அந்த இராட்ச்சச புலியை அங்கிறுந்து நாயகன் விரட்ட. அந்த கிராமவாசிகளும் அந்த கொள்ளை கூட்டத்தில் கொண்டு சென்ற தனது பிள்ளைகளை காப்பாற்ற செல்கிறார்கள், இராமாயணத்தில் குகன் மற்றும் மற்றவர்கள் நால்வரோடு ஐவரானோம் அறுவரானோம் என்று சொல்வதை போல.




இப்படி படிப்படியாக ஒரு பெரிய படை தயாராகி அவர்கள் சென்று அந்த கொள்ளை கூட்டத்தை பிடிப்பதற்குள் அவகள் ஒரு படகை பிடித்து மறைந்து விடுகிறார்கள். பிறகு அந்த படகு சென்றபாதை தெரியாமல் பல நாட்கள் அந்த பாலைவனத்தில் திக்கு தெரியாமல் அலைகிறார்கள். பிறகு திரும்பிபோகவும் கூட வழி இலையே என்று நினைக்கும் போது வானத்து வின் மீன்களின் துணை கொண்டு சரியாக எதிரிகளின் இருப்பிடம் கண்டு பிடுத்து சென்று தொலைவிலே இருக்கிறார்கள்.

பிறகு தாக்குதலுக்கு திட்டமிடும் வண்ணமாக அடிமைகளை வத்திருக்கும் இடத்திற்கு அந்த தலைவனும் நாயகனும் செல்கிறார்கள். அங்கே அவர்களது சொந்தங்களை கண்டு பேசுகிறார்கள். பிறகு ஆயுதங்களை எங்கே புதைத்து வைப்பது பிறகு எப்படி எடுப்பது என்று திட்டம்மிடுகையில் அங்கே எதிராளியின் முக்கிய பணியாள் ஒருவன் குருடன் அங்கே இருக்கிறார்.
அந்த குருடர், அந்த எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்றும். மற்றும் வானவியலின் நட்சத்திர தோற்றம் இப்படி வரும் போது அவர்களுக்கு அழிவு வரும் என்று அவர்களுக்கு தெரியும் என்றும் சொல்கிறான், இராமாயணத்தில் வீடனன் சொல்வதை போல.




அடுத்த நாள் பகலில், அடிமைகளோடு அடிமைகளாக இவர்களும் கலக்கிறார்கள். அப்படி கலந்த நாயகனும், மெமோத்தின் அடிப்படி குணமும், அதை மிரளவைக்கும் உத்தியும் தெரிந்தவன். அப்படி அருகாமையில் இருக்கும் மெமோத்தை பத்தி விடுகிறார். ஒன்று ஓட ஆரம்பித்ததும் அனைத்தும் பின் தொடர்ந்து செல்கிறது. இந்த கலவரத்தில் 30க்கு இருவர் மூவர் என்று இருக்கும் கண்கானிப்பாளர்களை வென்று தமது மக்களை மீட்கிறார்கள் நாயகன்.

அப்படி வெல்லும் சமயத்தில் அந்த பெண்ணை இரு கைகளையும் இரண்டு குதிரைகளில் கட்டி வைத்து இதற்கு மேல் வந்தால் அவளை கொன்றுவிடுவோம் என்று மிரட்ட அடிபணிகிறார் நாயகன். எதிரியின் அத்தணை ஆணைக்கும் நாயகிக்காக விட்டுக்கொடுக்கிறார். படி படியாக அந்த பேச்சு எதுவுமே இல்லை என்ற நிலையில் வந்து நிற்கும் இடத்தில் எவரும் யோசிக்கா வண்ணம் அந்த வெள்ளை ஈட்டியை ஏவுகிறார் நாயகன் அந்த எதிரியின் தலைவனை நோக்கி. அந்த மாபெரும் உருவம் சாய்கிறது.
அந்த நேரத்தில் இந்த பெண்ணின் மேல் நோட்டம் கொண்ட எதிரி படையின் தலைவன் ஒருவன் அவளை கவர்ந்து செல்ல முற்பட, அந்த பெண் அவனை ஒரு அம்பால் குத்திவிட்டு தப்பிக்கிறாள். அப்படி அவள் வந்து நாயகனை அடையும் போது அவளது உயிரை குடிக்கிறான் அந்த படையாள்.
அந்த நாயகனின் பெரிய அன்னை தனது உயிரை தந்து இந்த யுவதியை மீட்டு தந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு இவர்கள் வீடு திரும்புகிறார்கள். வழியில் ஒவ்வொருவரையும் விட்டு முறைபடி விடை பெறுகிரார்கள், இராமாயணத்தில் நடப்பதை போல.

இந்த கதைக்கும் இராமாயணத்திற்கும் ஒருக்கும் ஒரே வித்தியாசம், இந்த கதையில் எல்லாமே இயல்பாக இருப்பதும், இராமாயணத்தில் எதையுமே நம்பும் படியாக இல்லாமம் பெரும் புணைக்கதையாக இருப்பதும் தான். ஆகவே இராமாயணம் அவர்களது கதையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது கருப்பாக வந்தி எடுத்தான் என்று சொன்ன சொல்லை கடைசியாக சொல்பவர் காக்கா காக்காவாக வாந்தி எடுத்தான் என்று திரிந்து வருவதை போல் இப்படி ஏகப்பட்ட எட்டு கட்டுகள் புகட்டி இங்கே சொல்லு இப்போது இராமன் பாலத்தை காக்க வந்துவிட்டார்கள் போலும்.

படத்தில் வரும் நாயகனை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வித மஞ்சள் நிறத்தில் தோன்றும் படியாகவும், மற்றவர்கள் அனைவரும் ஆப்ரிக்க இனத்தவர்களையும் காட்டுகிறார்கள். இதைத்தான் இராமாயணத்தில் இராமனை தேவர்களாகவும், மற்றவர்கள் அனைவரையும் குரங்குகளாகவும் காட்டுகிறார்கள். அந்த எதிரியின் பெரிய உருவத்தை தான் இங்கே அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் சொல்கிறார்கள் போலும்.
கடத்தி சென்ற பெண்ணை ஒவ்வொருவனும் அணுபவிக்க நினைக்கும் போது அது எதனாலோ ஒரு காரணத்தால் தடை பட்டுகொண்டே போகிறது என்று அவர்களது கதையிலும் காட்ட தவறவில்லை.

மேலும் அந்த பெண்ணில் துவங்கும் படம் அவளை வீட்டிற்கு அழைத்து வந்ததில் முடிகின்றது.

படம் முழுக்க அந்த இருவரும் தோன்றும் அத்தனை காட்சிகளிலும் தங்களது ஈட்டியுடனே தான் வருவார்கள், இவர்கள் வில்லுடனே வருவதைப்போல். மேலும் கங்கை கரை இமாயலத்தில் இருந்து வரும் ஒரு குளிர்ந்த பிரதேசம், இந்த கதையில் காட்டும் இடத்தை போல.
இப்படி இராமாயணத்து அத்தனை கதையம்சங்களையும் இந்த 10,000 கிமு வில் கானலாம். படத்தை பாருங்கள் பிறகு எனது விமர்சனம் சரியா என்ன்று சொல்லுங்கள்.

தசாவதாரம் ஆங்கில படம் CHILL FACTOR படத்தின் மொழி பெயர்ப்பு





இந்த படம் வந்ததில் இருந்து பலதரபட்ட விமர்சனங்கள் வந்துவிட்டதால் விளக்கமாக ஒரு விமர்சனங்களை வைக்கப்போவது இல்லை.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான், படம் துவங்கும்போது கடலில் இருந்து ஊருக்குள் காட்சி பாயும் தசாவதாரத்தில் துவங்குவது போல. அது ஒரு தனித்தீவு அங்கே இராணுவத்தின் தேவைக்காக நவீன ஆயுதங்களை பரிசோதிக்கும் களம். அங்கே புதிதாக தயாரிக்கப்பட்ட வைரசு குண்டை வெடித்து சேதாரமும் வீரியமும் எவ்வளவு என்று பார்க்கும் பயிற்சியை மேற்கொள்ளுகிறது ஒரு இராணுவ படையணி ஆய்வாளர்களுடன் இணைத்து.


அந்த ஆய்வை துவக்கிய பிறகு தான் குண்டின் வீரியம் இவர்கள் எதிர் பார்த்ததைவிட மிகவும் அதிகமான அளவில் இருக்கும் என்று கணித்து, சோதனையை நிறுத்தும் தருனத்தில் எல்லம் முடிந்து விடுகின்றது. அங்கே இருந்த இராணுவ படையணி முழுவதும் இறக்கின்றார்கள். அந்த படையின் தளபதியை இதற்காக 10 ஆண்டுகள் இராணுவ சிறையில் அடைக்கிறது அரசு.

10 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு வெளிவந்த அந்த தளபதி, ஆய்வாளர்களின் கணிப்பு பிழைக்கு எனக்கு 10 அண்டு சிறையா என்று அரசை பழிவாங்கும் செயலாக, தனது பழைய சாக்களோடு சென்று அந்த வைரசு குண்டை கைபற்றி தீவிரவாத நாடுகளுக்கு விற்று பழிதீர்த்துகொள்ள் செல்கிறார். அப்படி செய்யப்போவதாக முன்கூட்டியே அந்த ஆராச்சியாளரைசந்தித்து சூளுரைத்தும் அவர் அரசாங்கத்திற்கு சொல்லாமல் விட்டது ஏனோ என்று அந்த ஆங்கில படத்தில் விளக்கம் இல்லை.

பின்பு வைரசு குண்டு கொள்ளையில் குண்டடி பட்ட ஆராச்சியாளர் தன்னுடன் வழக்கமாக மீன் பிடிக்கும் இளைஞனிடம் சென்று அந்த வைரசு உள்ள பெட்டகத்தை கொடுத்துவிட்டு அடுத்த மானிலத்தில் உள்ள இராணுவ ஆராச்சியக்கத்தில் சேர்த்துவிடவும் என்று சொல்லி இறக்கிறார். குறுப்பாக இந்த பெட்டகம் 50 பாரன் வெப்பத்து வந்துவிட்டல் இறுகிய நிலையில் இருக்கும் வைரசுகள் வெளியேறி எல்லோரையும் கொன்றுவிடும். ஆகவே கவனமாக கையாளவும் என்று அறிவுறுத்தி சொல்வார்.


இதைத்தான் தசாவதாரத்தில் கமலகாசன் மூச்சிக்கு முன்ணூறு தடவை அந்த வைலை திறக்க கூடாது, அது வெப்பமாக கூடாது என்று படம் முழுக்க சொல்லிக்கொண்டே வருவார். ஒரு கட்டத்தில் இந்த ஆங்கில படத்தில் வெப்பமானியை கொண்டு வெப்பம் பார்த்து இன்னமும் கொஞ்சம் பனிக்கட்டிகள் வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஆற்று மணலில் புதைத்துவிட்டு கடைக்கு சென்று பனிகட்டிகளை வாங்கிவருவதாக படமாக்கி இருப்பார்கள் தமிழில்.


பிறகு இந்த வைரசு பெட்டகத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞன் கிளம்பும் தருவாயில், அந்த தளபதியும் அவனது சகாக்களும் அந்த கடைவரையில் வந்து சோதனையிட்டு செல்லும் போது அங்கே ஒரு ஐசு கிரீம் விற்கும் வண்டி வருகிறது. அந்த வண்டியை ஓட்டிவரும் கருப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த வண்டியை கடத்தி வந்து இருப்பார். அவரும் இந்த மீன் பிடியாளரும் சேர்ந்து வைரசு பெட்டகத்துடன் அந்த வண்டியில் சத்தம் இல்லாமல் தப்பிப்பார்கள்.


இவர்கள் தப்பிப்பதை தெரிந்துகொண்ட தளபதி அந்த ஓட்ட வண்டியை 4 நவீன இரக வண்டிகள் கொண்டும் சென்று பிடிக்க முடியாமல் பின்னாலே துரத்திகொண்டு ஓடுவார். அந்த தளபதியுடன் மல்லிகா சராவத்து போல் ஒருவரும் வருவார், தசாவதாரத்தில் தேவையே இல்லாமல் மல்லிகா இடம் பெறுவது இப்படிதான்.


தசவாதாரத்தில் கமலும் அசினும் சேர்ந்து தப்பித்து ஓடும் காட்சிகள் அனைத்தும் இந்த காட்சிகளில் பார்க்கலாம். படத்தில் அசின் எதற்கு வருகிறார் ஏன் பெருமாலே பெருமாலே என்று மட்டுமே சொல்லி கமலோடே அலைகிறார் என்று காரணம் கேட்போருக்கு இது தான் விடை. அந்த படத்தில் இருவர் தப்பி ஓடுவார்கள் தமிழில் அப்படி இருவர் வேண்டும் என்றால் மறுபடியும் அர்சுனை குருதிபுனலில் சேர்த்துகொண்டதை போல் செய்ய வேண்டும் அதற்கு பதில் அசினை போட்டுவிட்டால் வேலை மிச்சம். நல்ல திரைக்கதை நுட்பம் இல்லையா.


இப்படி தப்பி ஓடும் வழியில் ஒருவரின் வண்டியும் மோதி வண்டி கவிழும், இது தான் தசாவதாரத்தில் அந்த நெட்டை கமல் தோன்றும் காட்சி. பிறகு அவரிடம் இருந்து படகை பறித்துகொண்டு மிகவும் ஆழத்தில் ஓடும் ஆற்றில் குதிப்பார்கள் இருவரும். தசாவாதாரத்தில் இரயில் வண்டியில் இருந்து ஏன் ஆற்றில் குதிகிறார்கள் என்று இதை பார்த்தால் புரியும்.


இப்படி ஒருவழியாக அந்த தளபதி அந்த பெட்டகத்தை இவர்கள் இருவருடனும் கைபற்றுவான். பிறகு அவர்களை கொண்டே தீவிரவாத நாடுகளுக்கு அந்த வைரசை ஏவி வித்தை காட்ட முற்பட அந்த மீன் பிடியாளனின் முன்யோசனையால் அது தவிர்கபட. பிறகு அந்த பெட்டகத்துடன் ஒரு குகைவழி பாதையில் பிடிபடுகிறார்கள் இருவரும்.


அங்கேயும் அந்த தளபதி வந்து அந்த வைரசை அமெரிக்க மக்கள் மீது ஏவியாவது தனது வெறியை தீர்த்துகொள்ள நினைக்க, அங்கே அந்த குகைவழி பாதையோடு அந்த வைசரை புதைகிறது அமெரிக்க இராணுவம். அங்கே கடைசி காட்சியில் ஒரு இராணுவ உலங்கு தாக்குதல் வண்டியில் வந்து தாக்கி குகை பாதையை தகர்ப்பார்கள் இங்கேயும் தம்மிழில் தேவையே இல்லாமல் ஒரு உலங்கு வண்டியில் வந்து அந்த வண்டியின் சத்தத்தில் உள்ளே இருப்பவர்கள்ளுள் நடக்கும் உரையாடல்கள் கூட கேட்க்கது என்று அவர்களுக்கு பேசிக்கொள்ள கருவிகள் உண்டு. ஆனால் அங்கே இருந்து கமல் அந்த வைசரை ஒப்படைக்கும் படி சொல்லி சுனாமியோடும் கதை முடியும்.




10 கமல் வேடங்களை இப்படி தான் பிடித்து இருகிறார்கள்.


1) அந்த மீன் பிடி இளைஞன்


2) அந்த கருப்பர் இன இளைஞன், இவர் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை பூவராகவனான கமல் பேசும் வசனங்களாக வரும்.


3) அந்த இராணுவ தளபதி வில்லன்


4) அந்த ஆராசியாளனாக ( தமிழில் ஆராச்சியாளனே மீன் பிடியானின் பாத்திரத்தையும் செய்தி இருப்பார்)


மேலே சொன்ன பாத்திரங்கள் நம்மை பாதிகாமல் போனதற்கு காரணம் அவர்கள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து எடுத்து கையாணடதால், பூவராகவனை தவிர, அந்த அராச்சியாளனாக வரும் இளைஞாக வரும் கமல் உட்பட.


மற்ற பாத்திரங்கள் இவர்களால் படைக்கப்பட்டதால், நாயுடு கமல் முதல் அந்த வயதான பாட்டியின் வேடம் வரை மனதில் நிற்கிறது. இந்த பூச்சுகள் தெரியாமல் இருக்கவும், பாத்திரங்களை 10ஆக மாற்றவும் அந்த 12ஆம் நூற்றாண்டு காட்சிகள். ஒரு வகையில் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம்.


கதை இப்படி இருக்க பாவம் பாரதிராசா அவர் பாடுக்கு என்ன என்னவோ உளரிக்கொண்டே இருக்கிறார் இன்னமும் பாவம்.